போராட்டக்காரர்களால் கையகப்படுத்தப்பட்ட ஜனாதிபதி மாளிகை உட்பட புராதன கட்டிடங்கள் கொழும்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்காக மீள ஒப்படைக்கப்பட வேண்டுமென காலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிளாக் கேப் அமைப்பு தெரிவித்துள்ளது.
புராதன கட்டிடங்களின் எதிர்கால பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும், மேலும் சேதமடைவதை தடுக்கும் வகையிலும் இந்த நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டுமென அந்த அமைப்பின் தலைவர் சமிர ஜீவந்த தெட்டுகே சுட்டிக்காட்டினார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலாநிதி வணக்கத்திற்குரிய ஓமல்பே சோபித தேரரும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டார்.
இதேவேளை, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று இன்று கோட்டை ஜனாதிபதி மாளிகையை அவதானித்துள்ளது. அந்த கட்டிடத்தில் தொல்லியல் மதிப்புள்ள சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய வேண்டும். தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அனுர மனதுங்க உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று இந்த இடத்தை அவதானிக்கச் சென்றுள்ளது.