அமைச்சரவை கூடாத காரணத்தினால் எரிபொருள் கொள்வனவு உள்ளிட்ட அவசர கொள்வனவுகளுக்கு பணம் ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி பங்கேற்காத காரணத்தினால் நேற்று நடைபெறவிருந்த அமைச்சரவை கூட்டம் நடைபெறவில்லை.
எரிபொருள் கொள்வனவு தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த யோசனையும் நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்குக் காரணம் பல கட்சித் தலைவர்கள் இந்த யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர்.
இதன் காரணமாக இலங்கைக்கு வரவிருந்த மூன்று எரிபொருள் கப்பல்களுக்கும் பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.