ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ அந்தஸ்தில் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளுக்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை என இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி இன்னும் உத்தியோகபூர்வமாக பதவியில் இருப்பதாக தொழிற்சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நாட்டை விட்டு வெளியேற வந்த போது, குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் அவருக்கு நாட்டை விட்டு வெளியேற அனுமதி வழங்க மறுத்ததாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.