(றாசிக் நபாயிஸ்)
கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணிப்பாளர் சபை உறுப்பினர் சகோதரர் எஸ்.எல்.எம்.நாசிறூன் அவர்களின் ஏற்பாட்டில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எம்.பி.அப்துல் வாஜித் ஆகியோரினால் மருதமுனை ஹியுமன் லின்க் விளையாட்டு மையம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இதன் போது கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களினால் மருதமுனை ஹியுமன் லின்க் விளையாட்டு மையத்திற்குத் தேவையான ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
பணிப்பாபாளர் ஏ.கமறுத்தீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.