ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச இராஜினாமா செய்து கொண்டது தொடர்பான அறிவிப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெளியிட்டுள்ளது.
அதிகாரத்தையும் பதவியையும் துறப்பது அரிது என்றும் அதிலும் அரசியல் அதிகாரத்தை துறப்பது எல்லாவற்றையும் விட அரிது என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் எந்தவொரு நிறைவேற்று ஜனாதிபதியும் தனது பதவிக்காலம் முடிவதற்குள் பதவியை விட்டு வெளியேறியதில்லை. எனவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மிகவும் கடினமான தீர்மானத்தை எடுத்துள்ளார் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு போர் வீரன் என்ற ரீதியிலும், பாதுகாப்பு செயலாளர் என்ற ரீதியிலும், ஜனாதிபதி என்ற ரீதியிலும் ஆற்றிய சேவைக்கு தலை வணங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.