சிலோன் இந்தியன் ஆயில் கம்பனியால் வழங்கப்பட்ட எரிபொருள் இருப்புக்களை விநியோகிப்பதற்காக இன்று சுமார் நூற்றுக்கணக்கான டேங்கர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சாந்த சில்வா கருத்துத் தெரிவித்தார்.
இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் பல நாட்களாக நீடித்த நீண்ட வரிசைகள் இன்னமும் காணப்படுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். பொது போக்குவரத்து சேவைகளும் குறைந்த மட்டத்தில் இயங்குவதாக மாத்தறை குரு டிவி செய்தியாளர் தெரிவித்தார்.