இத்தாலி பிரதமர் மரியோ டிராகி அந்த பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஆளும் கூட்டணியின் பங்காளிக் கட்சியான ஃபைவ் ஸ்டார் அரசுக்கு ஆதரவளிப்பதில் இருந்து விலகுவதாக அறிவித்ததே இதற்குக் காரணம்.
அதன்படி இத்தாலி பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். எனினும் அவரது இராஜினாமாவை இத்தாலி ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.