எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இராஜினாமா இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் உறுதிசெய்யப்பட்டதுடன், புதிய ஜனாதிபதி தனது அடுத்த பதவிக் காலத்தை நிறைவு செய்வதற்கு பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பது நீங்கள் ஏற்கனவே அறிந்த உண்மை.
வரலாற்றில் இதுவரை கண்டிராத பல அரசியல், பொருளாதார மற்றும் சமூக செயற்பாடுகளை அனுபவித்து வரும் இலங்கை மக்கள் ஒரு மாறுதல் காலத்தை கடந்து செல்கின்றனர். பொருளாதார நெருக்கடியின் மூலம் எழுந்த பொது எதிர்ப்பை உடைக்க அரசியல் அதிகாரிகளால் முடிந்தது. அதன் காரணமாக மக்களின் எதிர்பார்ப்புகளின் திசையே மாறிவிட்டது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் இந்நாட்டு மக்கள் இனி எந்த ஒரு துன்பமோ, கஷ்டமோ, விரக்தியோ அடையக்கூடாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். சிறிய பள்ளிக் குழந்தை முதல் ஓய்வு பெற்ற பெரியவர்கள் வரை, நெருக்கடிகளுக்கு நிலையான தீர்வைக் காண வேண்டும் என்ற எண்ணமும் ஆர்வமும் தொடர்ந்து இருப்பது புலனாகிறது. ஒரு வளர்ந்த கலாச்சார சமூகமாக, இவை அனைத்தும் ஜனநாயக அரசியலமைப்பு அரசியல் கட்டமைப்பிற்குள் தீர்க்கப்பட வேண்டும்.
நான் மூன்று தசாப்தங்களாக அரசியலில் ஈடுபட்டு வருகின்றேன் என்பதும், இந்த நாட்டு மக்களுக்காக எப்போதும் நான் நிற்கிறேன் என்பதும் இரகசியமல்ல. தற்போதைய அரசியல் குழப்பங்களுக்கு பாராளுமன்றம் மூலம் விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை. தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அனைவரும் ஒப்புக் கொண்ட பொருளாதார திட்டம் உடனடியாக தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். அதற்கு மகாசங்கரத்தினம் தலைமையிலான சகோதர மதத் தலைவர்கள், இளம் அரசியல் ஆர்வலர்கள், தொழில் வல்லுநர்கள் ஆகியோரின் ஆதரவை பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பெற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் அனைவரின் ஆதரவையும் உடன்பாட்டையும் பெறக்கூடிய நட்பும் நம்பகமான அரசியல்வாதியும் நான் என்பதை உறுதியாகக் கூறலாம்.
நாட்டில் தற்போது வெற்றிடமாக உள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவிக்கு பாராளுமன்ற மரபு மற்றும் அரசியலமைப்பின் பிரகாரம், ஒட்டுமொத்த பொது நலனுக்காகவும் இதில் நாகரீகமான அரசியல் கலாசாரத்தை நிலைநாட்டவும் நான் போட்டியிடத் தயாராக இருக்கிறேன் என்பதை இந்த நாட்டு மக்களுக்கு மரியாதையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நாடு, அரசியல் நிறக் கண்ணாடிகள் இல்லாமல், பாரம்பரியப் பிளவுகள் இல்லாமல், அமைதியான, வளர்ச்சியடைந்த இலங்கையை கட்டியெழுப்ப வேண்டும் என்ற உண்மையான நோக்கத்தைக் கொண்ட பரோபகார நாடாளுமன்ற உறுப்பினர்களின் தளராத ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.
நாடுகளுக்கிடையே சட்டத்தின் ஆட்சியையும் நல்லிணக்கத்தையும் பாதுகாத்து, இந்த தாய்நாட்டை பொருளாதார சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வதற்கு செய்யக்கூடிய மற்றும் செய்ய வேண்டிய கடமைகள் மற்றும் தியாகங்களுக்கு என்னை ஒருமனதாக அர்ப்பணிப்பதாக பொறுப்புடன் அறிவித்துள்ளேன்.
டலஸ் அழகபெரும
பாராளுமன்ற உறுப்பினர்
15.07.2022