நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் தண்டிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கத் தயார் நிலையில் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கு தேவையான சம்பிரதாயங்களை தயாரிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் தொடர்பில் 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நீதிமன்றத்தை அவமதித்ததாக உச்ச நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதன்படி கடந்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கரை வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.