இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 32 கோடி ரூபாவுக்கும் அதிகமான மருந்துகள் மற்றும் மருத்துவ உதவிகளில் முதல் பகுதியை இலங்கை பெற்றுக் கொண்டதுடன், அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவரின் தலையீட்டின் ஊடாக ‘ஹார்ட் டு ஹார்ட்’ என்ற சர்வதேச அமைப்புடன் இணைந்து இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை மக்களுக்கு சர்வதேச உதவிகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் மிகவும் அவசியமான நிலையில், ஹார்ட் டு ஹார்ட் என்ற சர்வதேச அமைப்பு காட்டிய அர்ப்பணிப்புக்காக இலங்கை மக்களும் தூதரகமும் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு தொடர்ந்தும் மனிதாபிமான உதவிகளை வழங்க இந்த அமைப்பு நம்புவதாகவும் கூறப்பட்டுள்ளது.