சீகிரிய – கும்புக்கடன்வல பிரதேசத்தில் டொனபிந்துன ஏரியில் நீராடச் சென்ற போது முதலையால் பிடிக்கப்பட்டு காணாமல் போன 7 வயது சிறுவனின் சடலம் இன்று (16) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடற்படையின் நீர்மூழ்கிக் குழுவினரால் 20 அடி ஆழமான குழியில் குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த குழந்தை நேற்று (15) காலை தனது தாய், தந்தை மற்றும் 11 வயது சகோதரியுடன் நீராடச் சென்ற போது முதலையால் பிடிக்கப்பட்டுள்ளது.