எரிபொருள் விநியோகத்திற்கான முன்னோடித் திட்டமாக நடமாடும் எரிபொருள் நிலையமொன்றை அறிமுகப்படுத்த பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, எதிர்காலத்தில் இந்த நடமாடும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கேன்களுக்கு எரிபொருளை விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாக விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் திரு.காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இது நாடளாவிய ரீதியில் விரைவாக நடைமுறைப்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.