“கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு நேர்மையாக செயல்படுங்கள்” அரசியல் வேறுபாடுகள் மற்றும் நிகழ்ச்சி நிரல்களுக்கு அப்பால் நேர்மையான, அனைவரின் நம்பிக்கையையும் பெறக்கூடிய இடைக்கால ஜனாதிபதி மற்றும் பிரதமரை நியமிப்பதற்கு இந்த நேரத்தில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணக்கப்பாட்டுக்கு வருமாறு இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை வலியுறுத்துகிறது.
இல்லையெனில், தற்போதுள்ள நிலைமை மோசமாகி, எம்.பி.க்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை இழக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் இதனை வலியுறுத்தியுள்ளது.