வெலிக்கடை ஒபேசேகரபுர நாணயக்கார மாவத்தையில் பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கி கண்ணீர் புகை குண்டுகளை திருடிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 13ஆம் திகதி இரவு பத்தரமுல்ல பொல்துவ மன்சந்தியில் இடம்பெற்ற போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் முச்சக்கர வண்டியில் தோட்டாக்களை ஏற்றிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போராட்டக்காரர்கள் காவல்துறை அதிகாரிகளை தாக்கி 50 கண்ணீர் புகை குண்டுகளை திருடப்பட்டிருந்தது. பொரளை கோதமி வீதி பகுதியில் உள்ள சந்தேக நபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 கண்ணீர் புகை குண்டுகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலன்னறுவை, காஷ்யபபுர பிரதேசத்தை சேர்ந்த கொத்தனார் ஆவார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள விளம்பரங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் இயங்கும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, சமூக வலைத்தளங்களில் இவ்வாறான விளம்பரங்களை வெளியீடு, தயாரிப்பு, விநியோகம் செய்தல் மற்றும் பரப்புபவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.