எரிபொருள் விலை குறைப்பு காரணமாக மக்களுக்கு நிவாரணம் வழங்க தமது சங்கம் தயாராக இருப்பதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கு முன்னர் முறையான முறையின் கீழ் இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போவின் ஊடாக தமது பஸ்களுக்கு எரிபொருள் வழங்கப்பட வேண்டுமென அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அவ்வாறானதொரு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாளை முதல் கூட பஸ் கட்டணத்தை குறைக்க சங்கம் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் இந்த யோசனையை தெரிவித்துள்ளார்.
எரிபொருட்களின் விலை குறைவினால் பஸ் கட்டணத்தை திருத்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள சாதகமான விடயங்களுக்கு தமது சங்கம் உடன்படுவதாக மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இவ்வாறு பெற்றோலின் விலை குறைக்கப்பட்டாலும், முச்சக்கரவண்டி கட்டணத்தை தற்போதைக்கு குறைக்க முடியாது என, நிபுணத்துவ முச்சக்கரவண்டி தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் நிஷாந்த குமார தெரிவித்துள்ளார்.