பிரஜைகள் போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (18) காலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்நாட்டின் ஜனாதிபதியை நியமிக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் போராட்டத்தின் பிரஜைகள் குழுக்கள் எதிர்க்கட்சித் தலைவரிடம் தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
போராட்டத்தின் கோரிக்கைகளுக்கு தானோ, தனது கட்சியோ, தனது கூட்டணியோ ஒருபோதும் துரோகம் இழைத்ததில்லை எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அது எதிர்காலத்தில் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.