நாட்டில் நிலவும் பணவீக்கம் காரணமாக பாடசாலை உணவுத் திட்டம் உரிய முறையில் அமுல்படுத்தப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையிலுள்ள 7925 பாடசாலைகளில் 10,000,800 சிறார்களுக்கு மதிய உணவு வழங்கி கிட்டத்தட்ட 30 வருடங்களாக இந்தப் பாடசாலை உணவுத் திட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இதனால், சீன மக்கள் குடியரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 10,000 மெற்றிக் தொன் அரிசியினை இவ் உணவுத் திட்டத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
சீன மக்கள் குடியரசின் இவ்வுதவியினை கல்விஅமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்கவிடம் உத்தியோகபூர்வ கையளிப்பு செய்துவைக்கும் நிகழ்வு கல்வி அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்றது
இது தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பை கீழே படிக்கலாம்: