இன்றும் நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, நாடாளுமன்ற வளாகம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளின் பாதுகாப்பிற்காக பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, உளவுத்துறை அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. வெற்றிடமாகவுள்ள ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.