இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் இந்தியன் எண்ணெய் நிறுவனமும் இணைந்து பெற்றோல் நிலைய உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 3% கமிஷன் பங்கு 1% ஆக குறைக்கப்பட்டதன் காரணமாக இந்த உத்தரவை இடைநிறுத்தத்தினை ஆரம்பிப்பதற்கு முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நஷ்டத்தினை குறைப்பதற்காக கமிஷன் தொகையை குறைத்துள்ளதுடன், நஷ்டத்தை குறைக்க விநியோகஸ்தர்களின் கமிஷன் தொகையை குறைப்பது நியாயமற்றது என குறித்த விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.
எரிபொருள் இருப்புக்கள் கொள்வனவு செய்யப்படாமையால் மக்களிடம் எரிபொருள் இல்லாமல் போகலாம் எனவும் இந்த நிலை காரணமாக மக்கள் மேலும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும் எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.