ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உட்பட பலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும, நாலக கொடஹேவா, சரித ஹேரத் ஆகியோர்களும் அடங்குவதாக அறியக்கிடைக்கின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும நேற்று பாராளுமன்றத்தில் இருந்து ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்புக்கு முன்வந்தார். அவரது பெயர் முன்மொழியப்பட்டபோது, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அதை உறுதிப்படுத்தினார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் பொருளாளராக டலஸ் அழகப்பெரும பதவி வகித்து வருகின்றனர்.
கட்சியின் ஒழுக்கத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இந்த குழுவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் மேலும் பல அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.