தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட இணையத்தளத்தின் ஊடாக மாத்திரம் பதிவுசெய்யுமாறு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.
இதற்கிடையில், தனிப்பட்ட தகவல்களை சேகரிக்க முயற்சிக்கும் அங்கீகரிக்கப்படாத இணையதளங்கள் குறித்து புகார்கள் கிடைத்துள்ளதால், அது குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
வெறும் 04 நாட்களில் 30 இலட்சம் பேர் இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்துள்ளதாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.