ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதையடுத்து வெற்றிடமாகியுள்ள பிரதமர் பதவியை யார் பிடிப்பது என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக .ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டதையடுத்து அவர் வகித்து வந்த பிரதமர் பதவி வெற்றிடமாகியுள்ளது.
வெற்றிடமாக உள்ள பிரதமர் பதவிக்கு, சபாநாயகர் தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தவிர, பிரதமர் பதவிக்கான சமகி ஜன பலவேகவின் எம்.பி.க்களான சரத் பொன்சேகா மற்றும் சுசில் பிரேமஜயந்த் தொடர்பிலும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், எதிர்காலத்தில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படுமாயின் பிரதமர் பதவியை எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவருக்கு வழங்க வேண்டும் என சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.