இந்த இக்கட்டான நேரத்தில் உன்னத இதயமும் தொலைநோக்கு பார்வையும் கொண்ட தலைவர்கள் எமது நாட்டுக்கு தேவை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது முகநூல் கணக்கில் விசேட பதிவொன்றில் வாழ்த்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
“பாராளுமன்ற வாக்கெடுப்பு மூலம் இந்நாட்டின் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட .ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
எமது நாடு முன்னெப்போதும் இல்லாத வகையில் சவால்களை எதிர்நோக்கியிருக்கும் வேளையில் அவர் அரசாங்கத்தைக் கைப்பற்ற வேண்டியிருந்தது.
முன்னைய துர்தாந்த ஆட்சி ஜனநாயக ரீதியில் கவிழ்க்கப்பட்டதன் பின்னணியில் பெரும்பான்மையான மக்களின் தீவிர ஆதரவுடனும் ஆசீர்வாதத்துடனும் இளைஞர் ஆர்வலர்களின் சமத்துவமற்ற நடவடிக்கையே பிரதான காரணம் என்பதை ஜனாதிபதி விக்கிரமசிங்க மறந்துவிடவில்லை என நான் நம்புகிறேன்.
ஆட்சியாளர் தன் நலனுக்காக உழைக்காமல் மக்கள் நலனுக்காக உழைக்கும் சட்டத்தின் ஆட்சி, நேர்மை, நல்லாட்சி என்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த மாபெரும் மக்கள் படையின் என்னம் எனபதை எல்லோரும் அறிந்திருக்கின்றோம்.
இது மிகவும் கடினமான பணி என்பதை நாங்கள் அறிவோம்.
அனைத்து இலங்கையர்களின் அபிலாஷைகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு, அரசியல் மற்றும் சிவில் சமூகத் தலைவர்கள் பரந்த நிர்வாக கட்டமைப்பிற்குள் நிர்வாகத்தில் ஈடுபட வேண்டும் என்று நான் நம்புகிறேன்.
அதற்காக, தற்போதைய ஆட்சி முறைகளை முறியடித்து, புதிய நிறுவனங்களும், நிர்வாக அமைப்புகளும் உருவாக்கப்பட வேண்டும்.
நமது வரலாற்றின் இந்த இக்கட்டான நேரத்தில், நமது நாட்டிற்கு உன்னத இதயமும் தொலைநோக்கு பார்வையும் கொண்ட தலைவர்கள் தேவை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எமது நாட்டில் இடம்பெற்ற இந்த மங்களகரமான நிகழ்வுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.