நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க தனது தனிப்பட்ட முகநூல் கணக்கில் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக பதிவொன்றை இட்டு 10 நிமிடங்களுக்குள் அந்த பதிவை தனது முகநூல் கணக்கிலிருந்து நீக்கியுள்ளார்.
பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்கவிடம் இது குறித்து வினவியபோது, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், பின்னர் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இவர்கள் இருவரும் ஜனாதிபதிக்கு ஆதரவாக வாக்களிக்க நேற்று (20) பாராளுமன்றத்திற்கு வந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களாவர்.