2022 ஓகஸ்ட் 01 ஆம் திகதி முதல் வெளிநாட்டு தபால் கட்டணங்கள் திருத்தப்படும் என தபால் திணைக்கள கட்டளைச் சட்டத்தின் கீழ் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதனால், வெளிநாட்டு விமான அஞ்சல் மற்றும் வெளிநாட்டு அஞ்சல் கட்டணங்கள் அதிகரிக்கும்.
முன்னதாக ஜனவரி 01, 2018 முதல் வெளிநாட்டு தபால் கட்டணங்கள் திருத்தம் செய்யப்பட்டது.
4 வருடங்களுக்கு மேல் கடந்துள்ள பின்னணியில் இம்முறை கட்டண திருத்தம் இடம்பெறுவதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இம்முறை வெளிநாட்டு தபால் கட்டணங்கள் அந்த கட்டண அமைப்புகளுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு அல்லது அதற்கு மேல் அதிகரித்துள்ளது.
திருத்தப்பட்ட முழு கட்டண அட்டவணையை உள்ளடக்கிய சிறப்பு வர்த்தமானி கீழே உள்ளது.