வெள்ளவத்தை விவேகானந்தா வீதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து ஒருவர் இன்று (22) காலை உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மஹியங்கனை பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் நிர்மாணிக்கப்பட்டு வரும் நான்கு மாடி வீடமைப்புத் தொகுதியில் பெயின்டராகப் பணியாற்றியவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.