ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள அனைவருக்கும் ஒரே சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமென கட்சியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். முன்னதாக, ஆட்சியில் எந்தப் பதவியையும் ஏற்பதில்லை என்று கட்சியின் மத்தியக் குழு முடிவு எடுத்திருந்தது.
இருந்த போதிலும் நிமல் சிறிபால த சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் கடந்த அரசாங்கத்தில் இரண்டு அமைச்சரவை பதவிகளை ஏற்றுக்கொண்டனர். தற்போதைய அரசாங்கத்தில் மஹிந்த அமரவீர அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
கட்சியின் முன்னைய தீர்மானம் இன்னமும் செல்லுபடியாகும் எனவும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்வது தொடர்பில் மத்திய குழுவின் தீர்மானத்தை அமுல்படுத்துவது தொடர்பில் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவே இறுதித் தீர்மானத்தை எடுக்க வேண்டும் எனவும் கட்சியின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக கடந்த பாராளுமன்றத்தில் நடைபெற்ற தேர்தலில் டலஸ் அழகப்பெருமுக்கு வாக்களிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்தது. இருந்த போதிலும், அவருடன் கட்சியின் பல உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவை தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.
யார் கட்சியை விட்டு வெளியேறினாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஒருபோதும் பின்னடைவு ஏற்படாது என இங்கு தெரிவிக்கப்பட்டது.