குரங்கு அம்மை நோய்த் தொற்று இலங்கைக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சுகாதார திணைக்களங்கள் ஏற்கனவே தீவிர கவனம் செலுத்தி வருவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
குரங்கு அம்மை நோய்த் தொற்று பரவல் மற்றும் ஏனைய நாடுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இந்நாட்டு சுகாதார திணைக்களங்கள் தற்போது ஆய்வு செய்து வருவதாக வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி பதிவாகும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கைகள் மற்றும் தேவையான வசதிகளை சுகாதார அமைச்சு ஏற்கனவே தயாரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்தார்.
குரங்கு அம்மை நோய்த் தொற்று உலக சுகாதார அவசரநிலையாக நேற்று உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதுவரை, உலகின் 47 நாடுகளில் 3,040 நோயாளிகள் குரங்கு அம்மை நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 02 இறப்புகள் பதிவாகியுள்ளன என்று உலக சுகாதார அமைப்பின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களில் குரங்கு அம்மை நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட மூன்று நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.