இன்று (24) காலை மொரவலப்பிட்டிய அலவ்வ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள வீதியில் ஏற்பட்ட வாகன நெரிசல் காரணமாக வீதியில் சென்றவர்களுக்கும் பேருந்திற்குள் இருந்தவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் குற்றச் செயல்களில் ஈடுபடத் திட்டமிட்டனர் என்ற சந்தேகத்தின் பேரிலும், குற்றச் செயலுக்கு சதி செய்த குற்றச்சாட்டின் பேரிலும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பேருந்தில் இருந்த சந்தேக நபர் ஒருவரால் 07 ரவைகள் அடங்கிய துப்பாக்கி மற்றும் ரவை பை ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 33 மற்றும் 53 வயதுடையவர்கள்.