கடந்த 13ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட இரண்டு T-56 துப்பாக்கிகளில் ஒன்று தியவன்னாவே ஓயாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடற்படையின் நீர்மூழ்கிக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே இது இடம்பெற்றுள்ளது.
அந்த துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் அடங்கிய பை ஒன்றும் சம்பந்தப்பட்ட இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடற்படையினர் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.