தனது மகளைக் கண்டுபிடித்துத் தருமாறு பொலிஸாரிடம் வலியுறுத்தி நபர் ஒருவர் குடாவெல, கலேவெல பிரதேசத்தில் உயர் மின்கம்பத்தில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கூலித் தொழிலாளியாக பணிபுரியும் அவர், ஒரு வாரத்திற்கு முன்பு, தனது 15 வயது மகள் உள்ளூர் இளைஞருடன் ஓடிவிட்டதாக தெரியவருகின்றது.
மேலும், சம்பவம் தொடர்பில் கல்கிரியாகம பொலிஸில் முறைப்பாடு செய்த போதும் பொலிஸார் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் தான் நேற்று முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், இது தொடர்பான விசாரணையின் போது, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கிரிபத்கொட கஹல சந்தி பகுதியில் உள்ள மின்கம்பத்தில் ஏறி இளைஞர் ஒருவர் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். காதலியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் போராட்டம் நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.