பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல் வீதி பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோல் திருடப்பட்டது தொடர்பான தகராறில் மோட்டார் சைக்கிளின் உரிமையாளரை மற்றைய நபர் கத்தியால் குத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இக்கொலை இன்று (25) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொரளை காசல் வீதியில் வசிக்கும் 40 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொலையை செய்த சந்தேகநபர் அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் ஆவார்.
இதற்கமைய, குறித்த சந்தேக நபர் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.