ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தற்போது போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அமைதிப் போராட்டத்தின் மீது அண்மையில் நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தாக்குதல் நடத்தியவர்களை வெளிக்கொணருமாறு அரசாங்கத்திடம் கோரியும் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம், இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளினால் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.