அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக எதிர்வரும் 12 மாதங்களில் எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டியிருக்கும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அமைச்சர் டுவிட்டரில் இதனை அறிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், நாளாந்த எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியாத காரணத்தினாலேயே QR முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.