உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக டி.ஆர்.எஸ் ஹப்புஆராச்சியையும், சுங்கப் பணிப்பாளர் நாயகமாக பி.பி.எஸ்.சி நோனிஸையும் நியமிப்பதற்கு நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக மேலும் பல முக்கிய பதவிகளுக்கான புதிய நியமனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தவ தெரிவித்தார்.