அம்பலாங்கொட பலபிட்டிய பிரதேசத்தில் இன்று (26) துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் பலத்த காயமடைந்து பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பலாங்கொட, மாதம்பகம பொனடுவ பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
சுட்டுக்கொல்லப்பட்ட நபர் கொலை வழக்கில் சந்தேக நபர்.
பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் இருந்து இன்று திரும்பிக் கொண்டிருந்த போதே அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.