பாராளுமன்றம் நாளை (27) காலை 10.00 மணிக்கு கூடவுள்ளதுடன், பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகால பிரகடனம் மாலை 4.30 மணி வரை விவாதத்தின் பின்னர் அங்கீகரிக்கப்பட உள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் திகதி விசேட வர்த்தமானி இலக்கம் 2288/30 ஊடாக அப்போதைய ஜனாதிபதியினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதுடன் சட்ட விதிகளின்படி அவசரகால அறிவிப்புக்கு 14 நாட்களுக்குள் பாராளுமன்றத்தின் அனுமதி பெறப்படாமல் போனால் ரத்து செய்யப்பட்டும்.
பொதுமக்களின் பாதுகாப்பையும், நாட்டின் வாழ்வையும் உறுதி செய்வதற்கும், மக்கள் வாழ்விற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை பேணுவதற்கும் பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தில் ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு அமைய இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.