நெல் கொள்வனவு செய்வதற்கான கொள்கை உடன்பாட்டை அமைச்சரவை நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வெளிப்படுத்தியதாக அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உரத் தட்டுப்பாடு ஒரு வாரத்திற்குள் முற்றாக நிறைவடையும் என விவசாய அமைச்சர் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்ததாக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் குறிப்பிட்டார். 2022 பயிர் பருவம்.