இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் இன்று (27) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஜூலி சாங் வாழ்த்து தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இரு நாடுகளுக்குமிடையில் தற்போதுள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், புதிய அரசாங்கத்தின் எதிர்கால பணிகளுக்கு ஆதரவு வழங்கப்படும் எனவும் திருமதி ஜூலி சாங் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்திப்புக்குப் பிறகு, திருமதி ஜூலி சுங் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் ஒரு குறிப்பைப் பதிவிட்டு,
, “நான் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை சந்தித்தேன். நாடு எவ்வாறு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலைக்கு வந்தது என்பதையும், நாட்டை மீண்டும் ஒளிமயமான எதிர்காலத்திற்கு கொண்டு செல்ல நாம் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுவது என்பதையும் நாங்கள் விவாதித்தோம். அழைக்கப்பட்டது.