நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால், தனிப்பட்ட இடைவெளியை பேணுமாறும் சுகாதாரப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுமாறும் சுகாதார அமைச்சு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
தரமான முகமூடியை முறையாக அணிந்து கொள்வதும் மிகவும் முக்கியமானது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
அறிகுறிகள் தென்படும் குழந்தைகளை பாடசாலை மற்றும் பகல்நேர பராமரிப்பு மையங்களுக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறும் பெற்றோர்களிடம் மருத்துவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள். இது தொடர்பில் கருத்து தெரிவித்த கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா.