57 வாக்குகளால் நேற்று நிறைவேற்றப்பட்ட அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு அமுலில் இருக்கும் என சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர். சட்டத்தரணி கலாநிதி பிரதீபா மஹாநாம, வானொலியொன்றிற்கு வழங்கிய நேர்காணலில், ஒரு மாதத்தின் பின்னர் அவசரகாலச் சட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கலந்துரையாடப்பட்டு, அதனை மீண்டும் நீடிக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்படுவதற்கு அடிப்படையான விடயங்களும் இங்கு விளக்கப்பட்டன.
எவ்வாறாயினும், அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டாலும் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதற்கு வாய்ப்பில்லை எனவும் கலாநிதி பிரதிபா மஹாநாம மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அவசரகால விதிமுறைகளின் கீழ், அத்தியாவசிய சேவைகளை நடத்துவதற்கு இடையூறு விளைவிக்கும் சகல நபர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என சட்ட வழிகாட்டலுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய சேவைகளை நடத்துவதற்கு இடையூறாக இருப்பவர்களின் சொத்துக்கள் கூட விசாரணையின் பின்னர் பறிமுதல் செய்யப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்கள் ஊடாக பொய்யான அறிக்கைகளை வெளியிடுவோர் மற்றும் அது தொடர்பில் செயற்படுபவர்களுக்கு எதிராக அவசரகால சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.