சுகாதார ஊழியர்களுக்கு தனியான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு வழங்கப்பட்டுள்ள சலுகையை மீளப் பெறுமாறு கோரி வவுனியா வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையம் ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது அதற்கான வசதி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.
தமது சேவைத் தேவைகளுக்கு ஏற்ப ஒதுக்கப்படும் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வவுனியா வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், துணை வைத்தியர்கள் மற்றும் கனிஷ்ட ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.