பொலன்னறுவை கதுருவெல ஐஓசி பெற்றோல் நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த போது ஏற்பட்ட வாக்குவாதத்தால் மோதல் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த மூவர் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெத் நியூஸ் செய்தியாளர் தெரிவித்தார். கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட ஒருவர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை காவற்துறையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.