சமூக செயற்பாட்டாளர் பெத்தும் கேர்ணல் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று சட்டத்தரணிகளுடன் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் ஆஜராகியிருந்தார்.
பத்தரமுல்லை பொல்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற போராட்டங்களுக்கு அவர் தலைமை தாங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஒழுங்கீனமாக நடந்துகொள்ளுதல், தானியங்கி துப்பாக்கிகள் திருடுதல் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் ஆகியவை அவர் மீதான மற்ற குற்றச்சாட்டுகள்.