போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் தற்போது வெளிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான “சினஐயா குணசேகரம் என்ற கிம்புல அலே குணா”வின் போதைப்பொருள் வலையமைப்பை நடத்தும் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்..
சந்தேகநபர்களிடம் இருந்து 15 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய 06 கிலோ 440 கிராம் கேரள கஞ்சா, 05 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட குண்டு என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக வத்தளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.