இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் கடுமையான பொருளாதார நிலைமை மற்றும் அது இலங்கை மக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து உலக வங்கி மிகவும் கவலையடைவதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக லீகா வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இலங்கை மக்களுக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதற்காக ஏனைய அபிவிருத்தி பங்காளிகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைத்து வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், போதிய பொருளாதாரக் கொள்கைக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்தும் வரை இலங்கைக்கு புதிய நிதி வசதிகளை வழங்கத் திட்டமிடவில்லை என உலக வங்கி வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதற்கு, பொருளாதார ஸ்திரத்தன்மையை மையமாக வைத்து ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் தேவை என அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அவசர தேவைகளை பூர்த்தி செய்வதற்காக உலக வங்கி இதுவரை இலங்கைக்கு சுமார் 160 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
மேலும், அடிப்படைச் சேவைகள்,பாடசாலை உணவுத் திட்டங்கள் மற்றும் நடந்துகொண்டிருக்கும் பிற திட்டங்கள் மூலம் மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் விநியோகம் போன்ற பிற தேவைகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாக உலக வங்கி மேலும் தெரிவித்துள்ளது.