சீனா உளவுக் கப்பல் ‘யுவான்வாங் 5’ இந்தியப் பெருங்கடலில் கணினி மேலாண்மை மற்றும் பகுப்பாய்வு கண்காணிப்புக்காக ஆகஸ்ட் 11 அன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நுழையவுள்ளது என்கின்ற செய்தியைத் தொடர்ந்து, இந்தியா தனது தென் பிராந்தியத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இலங்கையில் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலவும் சூழலை இலக்காகக் கொண்டு சீனாவுக்குச் சொந்தமான உளவு கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருகைத்தருவதானது இந்தியாவிற்கு கடும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ‘தி எகனாமிக் டைம்ஸ்’ செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இவ்வாறு வருகை தருகின்ற சீநாவுடைய கப்பலானது ஆகஸ்ட் 17 ஆம் திகதி தொடக்கம் 07 நாட்களுக்கு இலங்கையினுடைய கடற்பரப்பில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் வடமேற்குப் பகுதியில் கணினி மேலாண்மை மற்றும் பகுப்பாய்வு கண்காணிப்பு ஆகியவற்றிற்காக கப்பல் தனது செயற்கைக்கோள் தொலைக்காட்சி அமைப்பை இயக்க முடியும் என்று இந்திய செய்தி சேவை கணித்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டுக்குப் பிறகான காலப்பகுதிக்குள் இவ்வாறானதொரு சீனாவுடைய கடற்படைக் கப்பலானது இலங்கைக்கு விஜயம் செய்திருப்பது இதுவே முதல் தடவையாக இருக்கின்றது.
இருந்தபோதிலும் 2014ஆம் ஆண்டில் இலங்கையின் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் சீன நீர்மூழ்கிக் கப்பல் நங்கூரமிட்டிருந்த போது இந்தியாவை இந்நிகழ்வு கோபப்படுத்தியது என்பது இங்கு குறிப்பிடவேண்டிய விடையமாகும்.