தற்போது நிலவும் நெருக்கடிக்கு மக்கள் சிந்தனை மூலம் தீர்வு காண முடியும் என்றும் அடக்குமுறை மூலம் அல்ல என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
இன்று (28) காலை கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மத்திய வங்கிக் கொள்ளையினால் மக்கள் எரிவாயு வரிசைகளிலும் எண்ணெய் வரிசைகளிலும் இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.