பாடசாலை மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாத விடுமுறை வழங்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பல்வேறு காரணங்களால் பாடசாலைகளுக்கு அவ்வப்போது விடுமுறை அளிக்கப்படுகின்றது.
கடந்த காலங்களில் விடுபட்ட கற்கைகள் உடனடியாக வழங்கப்படுமெனவும் கல்வி அமைச்சர் .சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
மேலும், 05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை நவம்பர் 27ஆம் திகதி நடைபெறும் எனவும், உயர்தரப் பரீட்சை நவம்பர் 28ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 23ஆம் திகதி முடிவடையவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
அதன்படி, அந்த காலக்கட்டத்தில்பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் எனவும் அறிவில்லப்பட்டுள்ளது.