அடுத்த வருடத்திற்கான பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை கோரும் திகதி மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
பெற்றோரிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, அந்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் திகதி 15.08.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.